Wednesday, December 28, 2011

purithal

புரிந்து கொள்வதற்கான
முயற்சிகளும்
தவிப்புகளுமே
வளரும் அன்பின்
விதைகளும்
உரங்களும்.

பூரண புரிதல்
இவ்வுலகில்
அசாத்தியம்.

புரிதலின் முயற்சி
கைவிடப்படும்
அடுத்த கணமே
வெறுப்பினை
நோக்கிய
பாதைகள்
திறக்கப்படுகின்றன.

பிறரினை புரிய
முயற்சிப்போம்.
எம்மை
மீளாய்வு செய்வோம்

No comments:

Post a Comment