Wednesday, December 28, 2011

pmgg

ஊருக்கு நல்லாட்சியாய்
உதித்து
வெறும் சொல்லாட்சியாய்
மாறிய கற்றோரே!

பலர் கொண்ட ஷூரா
சபை அமைத்து
சிலர் கொண்ட தனிக்குழுவில்
முடிவெடுக்கும்
மண்ணின் மைந்தர்களே!

ஒரு தனி மனிதனை
கவிழ்க்க வேண்டிய
குரோதத்தில் ஊருக்கு
நன்மை பயப்பதாய்
வேடமிடும் வள்ளல்களே!

மேடைகள் அமைத்து
வேடங்கள் போட்டு
நாடகங்கள் நடித்தது
போதும் மக்களுக்கு.

சாதனைகள் சொல்வோம்
விமர்சனங்கள் வெறுப்போம் என
விமரிசையாக கூறிவிட்டு
விமர்சனத்தினையே தம்
முழுநேர சேவையாக
செய்பவர்களே!

சொல்லை விட்டு
செயலில் இறங்குங்கள்.
26 ம் திகதி மகிந்தவின்
காத்தான்குடி வருகையினை
பயன்படுத்துங்கள்.

1) ஊர் எல்லை
2) எம்மவரின் காணிகள்
3) குப்பை கொட்டுமிடம்
4) மடுவம்
5) அதிகரித்துவரும் சனத்தொகைக்கு
ஏற்ற உட்கட்டமைப்பு வசதிகள்
6) மையவாடிகாணிகள்
7) மாநகரசபையாக தரம் உயர்த்துதல்
8) தனியான கல்விவலயம்
9) உடைக்கப்பட்ட புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாயலின் கதி
10) 1000 பாடசாலைகள்
அபிவிருத்தியில் இணைக்கப்படாத எமது பாடசாலைகள்
என எவ்வளவோ விடயங்கள் உள்ளன
நீங்கள் மாண்பு மிகு ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பதற்கு.

படித்தவர்கள்
நாகரீகமானவர்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கும்
அணுகும் முறைகள்.

வாய்ப்பினை பயன்படுத்தாமல்
மற்றவர்களை குறை கூறி பலனேதுமில்லை.

No comments:

Post a Comment