Wednesday, December 28, 2011

the journey for europe

மேற்குலகில்
குடும்ப சுமை
குறைக்க தம்
இளமையினை
பெட்றோல்
பங்குகளில்
இழந்து
உதிரம் சிந்தி
உழைக்கும்
பாசம் கொண்ட
எம் ஊர்
நண்பர்கள்
மனிதருள்
மாணிக்கங்கள்.

அவர்களை தவிர்த்து,

மேற்குலகில்
மோகத்தில்
மதி
மயங்கி- பிறந்த
மண் வெறுக்கும்
மனிதர்களே!

பணம் மீது
பற்றுக்கொண்டு
பெண் மீது
பித்து பிடித்து
பெற்றோர்கு ஆற்றும்
பணி துறந்து
படைத்தோனிற்கு
பணிவு அற்று
பகட்டுடன் வாழ
பிறந்த பூமி விட்டு
பறக்க துடிக்கும்
பருவ வயதினரே!

புலியின் வாலாய்
இருப்பதை விட
எலியின் தலையாய்
இருப்பது சிறந்தது.

உணவை அளிப்பவன்
இறைவன்.
ஊரில் பெற்றோர்,
உறவினருடன்
வாழ்வதிலும்
இன்பம் உண்டு.

சொந்த
ஊரை நேசிப்போம்
சொந்த
ஊரில் வாழ்வோம்
சொந்த
ஊரை வளப்படுத்துவோம்.

No comments:

Post a Comment