Wednesday, December 7, 2011

குப்பையும் மடுவமும்

குப்பையும் மடுவமும்

காத்தநகரின் கீர்த்தியை
கடல் கடந்து ஏலமிட்டும்
தேர்தல்கள் பல வென்றும்
தீராத மாயமும்
நாள் ஓரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
கூடி வரும் கட்டணங்களும்
மடுவ மூடுவிழா நெருங்கியும்
கவனிப்பாரற்று இருக்கும்
தலைமைத்துவங்களும்
ஊரை அழகுபடுத்தும்
முனைப்பில் தவிர்க்கும்
மண்ணின் மைந்தனும்
மௌனம் காக்கும்
சம்மேளனமும்
உணர்த்தும் உண்மைகள் என்ன?

கடந்தது கடக்கட்டும்
நடப்பது நடக்கட்டும்
நாமும் எம் வாழ்வும் என
வாழும் எம் ஊர்
பெரியோர்களே!
பிணி தீர பணி
நல்க மாட்டீரா?

சடவுலக
சாத்தானின் வலையில்
சிக்குண்டு சிந்தனை தொலைத்த
எம் அருமை இளைஞர்களே!
அவலம் போக்க
கவலைப்பட மாட்டீர்களா?

அடிப்படைத் தேவைகளை மறுத்து
ஊரை அழகுபடுத்தி
உலகை ஏமாற்றும்
கயவர்களின் முகத்திரை
கிழிப்போம்.

மகிந்த தேரரின் வருகை
இந்து சமுத்திரத்தின்
முத்தை மாசகற்றியதாம்
மகிந்த ராஜபக்சவின்
வருகை கிழக்கிலங்கையின்
முத்தை மாசகற்ற வழி வகுப்போம்.

எங்கள் தேவைகளை
சாத்வீதமாக உலகுக்கு
எடுத்துரைப்போம்.

மகிந்தவின் வருகையினை
பயன்படுத்துவோம்.
ஊரின் களை அகற்றுவோம்.

26-12-2011 சுனாமி
நினைவுநாளில்
ஊரின் எம் நிம்மதியான
வாழ்விற்கு அடித்தளம் இடுவோம்.

No comments:

Post a Comment