Friday, January 6, 2012

mother

இன்பத்தினை
கருவாக்கி
உதிரத்தினை
பாலாக்கி
பாசத்தினை
அமுதூட்டி
வலி தாங்கி
விழி விரித்து
நோய் நீங்க
நோன்பிருந்து
அன்பாக
அரவணைத்து
பண்பான
பாடலிசைத்து
சிறு சிரிப்பினில்
சுவர்க்க சுகம் கண்டு
காற்றும் தீண்டா
அரண் அமைத்து
அழுக்கு அகற்றி
அழகு படுத்தி
மழலையில்
மனம் மகிழ்ந்து
கண்ணூறு
கழிக்கும்
கவலையில்
உளம் நொந்து
அனுதினமும்
அடிமை தொழில் ஏற்
எமை அன்று முதல்
இன்று வரை காக்க
இறைவனை
இறைஞ்சும்
ஒரே
ஜீவன்
அன்பின் சிகரம்
அம்மா.

No comments:

Post a Comment