Wednesday, January 25, 2012

பெண்களும் ரோஜாக்களே!

தோட்டத்தில் சில ரோஜாக்கள்.

கண்ணை கவரும்
நிறமோ,
மனதை மயக்கும்
மணமோ,
அசைந்தாடும்
அழகோ,
சிலரை அங்கே
கவர்ந்திழுத்தன.

பறித்து எடுத்தனர்.
அவரவர்
பிடித்த ரோஜாவினை.

பொத்தினான், ஒருவன்
தம் கைகளினால்.
அதிகாரத்தில்.

உயர்த்தி பிடித்தான், ஒருவன்
பெருமையில்.

பத்திரப்படுத்தினான். ஒருவன்
தன் சட்டைப்பையினில்.
அளவுமீறிய பாசத்தில்.

பொத்திய கைகள்,
பிசுபிசுத்தன.
முகர்ந்தால் சகிக்க
முடியா நாற்றம்.

உயர்த்தியதன்
வாசனையினால்
கவரப்பட்டான்.
வேறொருவன். விளைவு
ரோஜா பறிபோனது.

தேகம் நோக
தைத்தது,
சட்டை பையில்.
ரோஜாவின் முள்.

பெண்களும்
ரோஜாக்களே!

No comments:

Post a Comment