தினந்தோறும் மணிகணக்கில்
கைபேசியில் பேசி...
தினமும் சந்தித்து
போலியான புன்னகை சிந்தும்
காதலியைவிட...
வாரத்தில்
ஒருமுறை பேசி...
மாதத்தில் ஒரு
முறை சந்திக்கும்போது...
உரிமையோடு கோபம் கொள்ளும்
உறவே நிலையானது...
காதல் இல்லா உலகில்
வாழ நினைக்கலாம்...
நட்பு இல்லா உலகில்
வாழ நினைக்காதே...
நேசித்துபார் நட்பினை
உன் வாழ்கை வசந்தமாகும்.....
No comments:
Post a Comment