Sunday, November 27, 2011

journey

ஓர் மழைக்கால இரவில்
விலாசத்துடன் வீதிகளை
தேடும் விழிகளுடன்
பேரூந்தின் ஜன்னலோர
இருக்கையில் ஓர் ஆத்மாவின்
பயணத்தை ஒத்தது
எமது உலகவாழ்க்கை.

அவதானமற்று உறக்கத்திலும்
பேரூந்தின் பாடல் மயக்கத்திலும்
தரிப்பிடத்தை தொலைப்பதே
எம்மவரின் நிலை இன்று.

விலாசமற்றவர்க்கு
வழி காட்டவேண்டிய நாம்
விலாசத்துடன் எமது
வழி தொலைக்கின்றோம்.

பேரூந்தின் தரிப்பிடம்
கடந்தால் மீண்டுவர
வழி உண்டு.
வாழ்க்கை முடிந்தால்!

No comments:

Post a Comment